Monday 19 December 2011

மயங்குகிறேன்


உச்சி வகிட்டில் நெற்றி குங்குமம் வைத்தபின் தான்
முதல் முத்தம் பதிப்பதென முடிவோடிருக்கிறேன்
கள்ளவிழியால் கட்டியிலுத்தால்
கட்டாயமாய் மாற்றிவிடுவேன் குறிக்கோளை
தேநீர் கூட அதிகம் அருந்தாதவன் நான்
கண்ணுக்குள் கள்ளையூற்றி
முழுநேர குடிகாரனாக்கிவிட்டாய்

உதட்டைச் சுழித்தாலே உருக்குலைகிறேன் நான்
வாய்விட்டு சிரித்தால் விழுங்கிவிடுவேன் உன்னை
கல்யாணத் தேதி சொல்லும்வரை காணதே - என
கண்ணுக்கு கட்டளையிட்டால்
சத்தியத்துக்கு சாட்சியாய்
உன்னையல்லவா தேடுகிறது

தங்கையின் திருமணத்திற்கு
வரச்சொல்லி அழைப்புவைத்தேன்
வீட்டில் எல்லாரும் யாரெனக் கேட்டால்
வீட்டுக்காரி எனச் சொல்லவா?
கண்ணசைவால் ஒத்துக்கொள்
கட்டிவிடுக்கிறேன் தாலியை
ஒற்றை மேடையில் இரட்டை கல்யாணம்

Thursday 15 December 2011

மறுஜென்மம்

College tour போகவேணும் ஆயர்ரூபா(1000rs) தாயேன்
உங்க அப்பா எங்கிட்ட குடுத்து வச்சிருகாரு பாரு!
Pocket money நூறுரூபா தாயேன்
வட்டிக்குத்தான் வாங்கிட்டு வரணும்

சரி ஒரு முத்தமாச்சும் கடனா தாயேன்
சிரித்தால் அம்மா!!
அப்பாவிடம் வட்டியும் முதலுமா வாங்கித்தரேன்
போடா போக்கிரி என்று சொல்லிக்கொண்டே கொடுத்தால் ஆயிரத்திநூறாக(1100)

நரையவிழுந்தும் இளமையாக
மலடியென்றறிந்தும் மனைவியாக
தத்தெடுத்து முத்து கொடுத்த தந்தையாக
என்றும் என்னுயிர் காதலாக

புது சேலை கட்டி வந்தால்
புள்ளை பெத்துக்க வக்கில்லை - என்று
ஊர் வாயில் உலையாக
உருகி நின்றேன் சிலையாக

விரதம் எதையும் விடவே இல்ல
வேண்டுதலும் பலிக்கவில்ல
மருத்துவமனையில் பலியா கிடந்தும்
வயிறு மட்டும் நிரம்பவில்ல

மனைவி நான் இருந்ததனால்
மறுமணம் செய்ய மறுத்தாயோ?- இல்லை
மாறாகாதலுடன் உன்
மனக்கவலை மறைத்தாயோ?
மறுஜென்மம் என்றொன்றிருந்தால்
உன்னையே மணந்திடுவேன்
ஒரு குழந்தை பெற்றிடுவேன்
ஒன்றோடு நில்லாமல் இன்னொன்று தத்தெடுப்பேன்

Tuesday 13 December 2011

காதல் மொழி


சிரிச்சுகிட்டே பறக்கும்போது
பறவையென நினைத்தேன் பெண்ணே! - ஆனால்
என்னிடம் இருப்பது மனம் தான் மரமல்ல
மரங்கொத்தி பறவையாய் நீ இருக்க

உழைத்து உழைத்து உயர்ந்தவன் நான்
உன்னை கண்டாலே உருகுகிறேன்
குழந்தை என நீ சிரித்தால்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை இழக்கிறேன்

பல நாடு சென்றவன் தான்
பல மொழிகள் கற்றவன் தான்
காதல் மொழி பேச மட்டும்
வார்த்தை தேடி தட்டழிகிறேன்

சண்டியனாய் திரிந்தவனடி
இன்று சமாதானம் பேசுகிறேன்
கயல் விழிகளை முடிக்கொள்
கண்டிப்பாய் சொல்லிவிடுவேன் காதலை!!

Monday 12 December 2011

அணை (அ) ஆணை

இடுக்கி தேர்தலில் நீ வெற்றிபெற
தமிழகத்தை தரிசாக்கி
பரிசு கொடுக்க வேண்டுமா???

உன் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கொடுக்க
உம்மன் சாண்டி கொள்கைக்கு நாங்கள் ஒத்துகொள்ளவேண்டுமா?

குழி தோண்டி அணை கட்டிவிட்டால்
எங்கள் மண் மலடாகி விடாதா?

வந்தவர்களை வாழவைப்பது சரிதான் - அதற்காக
நாமின்னும் இளிச்சவாயர்களாய் இருக்க வேண்டுமா?

தாய் மண்ணை காப்போம் என படத்துக்கு படம்
வீர வசனம் பேசிய ஒருவர்கூட
வாய் திறக்கவில்லயே!!

அணைக்காக தமிழக எல்லையில்
அடி பட்டு சாவது
அயல் நாட்டினன் இல்லையட - நம்
அண்ணன் தம்பிகள்..

அணை கட்டியவனின் வாரிசு
அமெரிக்காவில் இருக்கிறதாம்
மெயில் அனுப்பினராம் - வந்து
உயிலயா மாத்தி எழுதப்போகிறான்?

மாநகரத்து மாமணிகளே
இன்று பேப்பர் படித்து அநியாயத்தை மறந்துவிட்டால்
நாளை சோற்றுக்கு பக்கத்து மாநிலத்திடம்
பிச்சை தான் எடுக்கவேண்டும்

மத்தியரசு ஊழலை மட்டும் அல்ல
உணவு பிரச்சனையையும் மதிக்காது
ஒன்றாய் குரல் கொடுப்போம்
உரிமைக்காக நாம் மரிப்போம்

Sunday 11 December 2011

பெண்ணே!!

கற்பு என்றால்
கண்ணகி என்றாய்
உன் பெயர் இல்லையா?
அந்த பட்டியலில்!

உற்றுஉற்று பார்க்கிறான் - என்று
உண்மைதனை மறைத்தாயே!
மனசாட்சியை கேட்டுப்பார்
அவனை உறுத்துவது யார் எனச் சொல்லும்

பெண்களுக்கு எதிரியல்ல - நானும்
பெண்புலிக்கு பிறந்தவள்தான் - இப்போதும்
பெண்ணியம் தான் பேசுகிறேன்
பெண்மைதனை எடுத்துரைக்க!

அயல்நாடு சென்றிடுவோம்!
அங்குள்ள நாகரீகம் படித்திடுவோம் - என்
பெண்ணல்ல இவளென்று
பெற்றோரே சொல்லும் அளவல்ல!

அனைத்து மொழிகள் கற்றிடுவோம்!
தமிழ் மொழியில் பேசிடுவோம்!
அந்நியனாய் எவனும் வந்தால்
அக்னியால் சுட்டிடுவோம்!

திருமணமும் செய்திடுவோம்!
கணவனயே காதலிப்போம்
ஒரு குழந்தை பெற்றிடுவோம்
பெற்றால் தான் பிள்ளையா? - இன்னொன்று
தத்துக் கூட எடுத்திடுவோம்!

படிப்புடன் பண்பினையும் கொடுத்திடுவோம்!
வீரத்துடன் பகுத்தறிவும் ஊட்டிடுவோம்!
அன்பொன்றே சிறந்ததென
அதன் வழி நடக்க செய்திடுவோம்!

அடுப்படியில் ராஜாங்கம்
அறுசுவையும் சமைத்திடுவோம்!
என் ராஜாத்தி பெண்ணென்று
மறுஅன்னை(மாமியாரை) சொல்ல வைப்போம்!

கூட்டுக்குடும்பம் தனில் வாழ்ந்து
சொந்தங்களோடு சிரித்திடுவோம்!
நிறை குறைகள் எதிலும் உண்டு
அதை நட்போடு சரி செய்வோம்!

சீதை என நீ இருந்தால்
தீக்குளிக்க தேவையில்லை!
முண்டாசு கவி சொன்ன
முறைப்பற்றி வாழ்ந்திடுவோம்!

கணிணி மட்டும் கல்வியென்ற
கருத்துதனை மாற்றிடுவோம்!
விவசாயம் அதில் சேர்ந்து
வருங்காலத்தை பலம் செய்வோம்!

தாய்மை மட்டும் பெண்ணல்ல
தாய்நாட்டிற்கும் வளம் சேர்ப்போம்!
அரசியலில் நுழைந்திடுவோம்
அசிங்கங்களை களைந்திடுவோம்!

ஏழைகளும் மனிதரென
எடுத்துணர செய்திடுவோம்!
எளியவர்க்கு வேலை தந்து
இலவசங்கள் அழித்திடுவோம்!

விண்வெளியும் சென்றிடுவோம் - அங்கும்
விருந்தோம்பல் தனை செய்வோம்!
ஆடவர்க்கு நிகரெனவே
அனைத்தையுமே கற்றிடுவோம்!

காலடித் தடம் பதிக்க
கடல்தாண்டி சென்றிடுவோம்!
விதிவிலக்கும் சிலர் உண்டு - அவர்களை
விடைப்பெறவே செய்திடுவோம்!

சிவனின்றி சக்தியில்லை
எனும் கருத்தில் நாட்டமுண்டு
தோழமையுடன் நீ இருந்தால்
தோல்விக் கூட சீண்டாது!

பெருநிம்மதி எனக்குண்டு
உங்களில் நானும் ஒன்றென்று
பெண்மையினை எடுத்துரைக்க
நல்ல சந்தர்ப்பம் இதுவென்று!

Wednesday 7 December 2011

எம்புள்ள

வெள்ளந்தி மனசுக்குள்ள
வெத நெல்லா உன் நேசம்
இப்போ மேடான வயித்துக்குள்ள
மிதக்குதொரு சிங்கக்குட்டி

சேட்டை பல செஞ்ச போதும்
இறக்கி வைக்க ஆசையில்ல
அவஸ்த பல தந்த போதும்
அலுப்பு கூட தோணவில்ல

நான் மட்டும் அனுபவிச்ச
இன்பமான இம்சையிது
நீ கை வச்சு பார்க்கையிலே
நெளியிறது உன் ஊசுரு

கைவளையல் இசைக்கேட்டு -இன்னொரு
இசைஞானி வருவானோ?
இரட்டையாத்தான் பொறந்திட்டா-மற்றொருத்தன்
கவிக்கூட படிப்பானோ?

இடுப்புவலி பொறுப்பேனா? - என
பயமுண்டு நெஞ்சுக்குள்ள
இருந்தாலும் பரவாயில்ல
கண்மணிய கண்ணெதிரில் காணயில

Tuesday 6 December 2011

என் நேசம்

காதலா??? நானா?? - என்று
பகலெல்லாம் போட்ட வேஷம்
இரவானால் கலையுதய்யா
தலையணையும் நனைகயிலே
தடுமாற செய்யுதய்யா
சட்டம் போட்டு பாதுகாக்க- உம்மனசு
முல்லை பெரியார் அணை இல்ல
பூகம்பம் வந்து நொறுங்கிடுமோன்னு
பயந்து போக தேவையில்ல
தாமிரபரணி தண்ணிகுடிச்சும்
தாகம் இன்னும் தீரவில்ல
தேக்கி வச்ச பாசமின்னும்
திச மாறி போயிடல
மருதாணி வச்ச கையி
சிவக்குமுன்னு தெரியுமய்யா
செவபுக்கு காரணம் தந்த
உன்ன இன்னும் காணவில்ல
மாளிகை புரத்து அம்மன் இல்ல
காலமெல்லாம் காத்திருக்க
மாறாத உன் நேசம் - என்
மதி மயங்க வைக்குதய்யா