Saturday 10 March 2012

பெண்ணே என் பெண்ணே

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
சிரிச்சுகிட்டே பொறந்திட்டா
தரணி ஆள வந்துட்டா
மலடி என்ற என் பெயர
மாத்திடவே வந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பள்ளிகூடம் போனவ தான்
ஃபஸ்ட் மார்க்கும் வாங்கிப்புட்டா
வாத்தியாரும் புகழும் வண்ணம்
நல்ல பண்போட வளந்துட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
படிப்பு மட்டும் போததுன்னு
கலைகளையும் கத்துக்கிட்டா
ஆத்தே எம்மவலா??னு
ஆச்சர்யத்த குடுத்துப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வயசுக்கு வந்தவ தான்
வறம்போட நடந்துக்கிட்டா
நா சொல்லி ஏதும் கொடுக்கலியே??
நாகரிகம் தெரிச்சுக்கிட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பட்ட படிப்பு படிச்சு வந்தா
கை தொழிலும் தெரிச்சு வந்தா
தான் வளந்த ஊருக்கே
தாசில்தாரா மாறி வந்தா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடக்கத்தோட வளத்த பொண்ணு
ஆள எப்போ கத்துகிட்டா?
ஆத்தாடி எம்மவ தான்
எங்கிராமத்த உசத்திப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
அடுப்படிக்குள் நொலஞ்சவதான்
அத்தனையும் சமச்சுப்புட்டா
மீன் கொழம்பு மணக்கயில
ஏ ஆத்தாவ மிச்சிப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
வாக்கப்பட்டு போனவதான்
பதவிசா நடந்துகிட்டா
என் மருமக தான் உசத்தியின்னு
மாமியார சொல்ல வச்சுப்புட்டா

பெண்ணே என் பெண்ணே 
அழகான என் பெண்ணே 
பொன்மகளே பொற்கொடியே
நா பெத்தெடுத்த பெண்புலியே
வையகமும் வாழ்த்தவேணும்
பல்லாண்டு வாழவேணும்

No comments:

Post a Comment