Monday 28 May 2012

அந்த அழகிய நிமிடங்கள்

பட்டு சீல கட்டிக்கிட்டு - உன்
பக்கத்துல நிக்கயில
ஊரே வந்து நின்னபோதும்
ஒருத்தர் கூட தெரியலியே

கை காலு நடுங்கரத
கண்ணில் யாரும் காணாம
பூச்செண்ட புடிச்சுக்கிட்டேன்
புது வெட்கம் பூசிக்கிட்டேன்

நண்பர் கூட்டம் சேர்ந்துகிட்டு
நையாண்டி செஞ்ச போதும்
தல நிமிர்ந்து பார்க்கலயே
தெளிவா ஏதும் கேக்கலயே

தாலி கட்டும் நேரத்தில
விரல் கொஞ்சம் தீண்டயில
நெஞ்செல்லாம் படபடக்க
கொஞ்சம் அழுகையும் தான் சேர்ந்து வர

நெத்தி பொட்டு வெக்கயில
இதுதான் நமக்கு நேரமுன்னு
தோளோடு சாஞ்சுக்கிட்டேன்
உன் பூ வாசம் தெரிஞ்சுக்கிட்டேன்

உன் விரல் பிடிச்சு சுத்திவர
நீ விஷமங்கள் செய்துவிட
சிரிக்கவும் முடியலியே
சிலிர்க்கவும் முடியலியே

வெள்ளி மெட்டி கொண்டு வந்து
கால் விரல் பிடிச்சு போடயில
எங்கிருந்து வந்திருச்சோ
இனம் தெரியா இளஞ்சூடு

பாலும் பழமும் தந்தவுக
பேசி பேசி என்ன ஏமாத்த
அத கண்டு நீ சிரிக்க
அந்த அழகில் சொக்கி போனேனே

No comments:

Post a Comment