Monday 28 May 2012

காதலினைப் புரிந்தாயோ?

கொஞ்ச நேரப் பிரிவுக்கே
கதி கலங்கி போனேனே
கை பையோடு உன்னையும் தான்
கொண்டுவர நினைச்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

உன் கையொடு கைகோர்த்து
கடல்மணலில் நடந்துவர
சிறு மணலும் வெட்கப்பட்டு
கடல் கொண்டு கண்மூட
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

ஆக்ஸிஜனும் நுழையாத
ஊருக்கு நாம் போவோமா?
அடையாளம் தெரியாம
அங்கேயே தொலைவோமா?
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

இதுவரைக்கும் சொல்லாத
புதிய வார்த்தை படிச்சேனே
என்னங்க னு சொல்லி சொல்லி
ஏங்கி ஏங்கி தொலைஞ்சேனே
கொண்டவனே உணர்ந்தாயோ? - என்
காதலினைப் புரிந்தாயோ?

No comments:

Post a Comment